மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை : அருண் ஜேட்லி….!!

Default Image

மக்களவை தேர்தலில், பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பா.ஜ.க இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைய இளைஞர் அணி உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்லும் பிரதமர் மோடியுடன் ஒப்பிட வேறு யாரும் இல்லை என்றும், தேசத்தை முதன்மையாக வைத்து செயல்படும் ஆக்கப்பூர்வமான பிரதமர் கிடைத்தது நமக்கு பெருமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மோடி அரசின் சாதனைகளை அனைத்து மட்டங்களிலும் தொண்டர்கள் விளக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்றவர்கள் அனைவரையும் பா.ஜ.க வினர் சந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்