பேட்மிண்டன் உலக டூர் பைனல்ஸ் இறுதிப்போட்டிக்கு 2-வது முறையாக முன்னேறினார் பி.வி. சிந்து…!!

Default Image

பேட்மிண்டன் உலக டூர் பைனல்ஸ் தொடரின் இறுதிக்கு, தொடர்ந்து இரண்டாவது முறையாக பி.வி சிந்து முன்னேறியுள்ளார்.
சீனாவின் குவாங்க நகரில், முன்னணி நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் பேட்மிண்டன் உலக டூர் பைனல்ஸ் தொடர்ந்து நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ரட்சனாக் இன்டானனை சந்தித்தார். முதல் செட்டை 21-க்கு 16 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் ரட்சனாக் கடைசி வரை போராடிய போதும், சிந்து 25-க்கு 23 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு சிந்து முன்னேறினார். இறுதி ஆட்டத்தில், ஜப்பான் வீராங்கனை ஓகுஹாரை நாளை சந்திக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்