ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையம்: ஜெயலலிதாவின் பணிப்பெண்கள் 3 பேர் ஆஜர்…!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர். போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்பணிப்பெண்களாக இருந்த தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகிய 3 பேர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.

Leave a Comment