மேகதாது விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் …!கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
மேகதாது விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், மேகதாது பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்புகிறோம், இதில் தமிழக அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டாம் .மேகதாது விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் .சட்ட ரீதியான விஷயங்களை பரிசீலித்து தான் திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.