கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கியுள்ளது மின்வாரியம்.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கியுள்ளது மின்வாரியம். நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு டிசம்பர் 26 ஆம் தேதி வரையும் தஞ்சை மாவட்டத்திற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கியுள்ளது மின்வாரியம்.