சர்வதேச மனித உரிமைகள் தினம்…!மனித உரிமைகள் என்றால் என்ன ?
1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச மனித உரிமைகள் தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மனித உரிமைகள் என்பது மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக்கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகள் என்று அழைக்கிறோம்.
அதன் அடிப்படையில், ஒருவரின் மதம், இனம், வாழ்விடம், சொத்துக்கள் என்பன மற்றொருவரின் உரிமையில் தாக்கம் செலுத்தாது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதனூடன் மனிதனை ஐக்கியப்படுத்தினால், அனைத்து நாடுகளும் முன்னோக்கி செல்ல முடியும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.