முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு வித்த ஆணையம்..!!

Default Image

முன்னாள் முதல்வரும் ,அதிமுகவின் பொதுசெயலாளருமாக இருந்து மறைந்த ஜெயலலிதா( டிச.,05 ) அவருடைய நினைவு நாளை முன்னிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா மரணம் குறித்த ஏதாவது ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால் அதனை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய எந்த செய்தியோ அல்லது தொடரோ அல்லது விவாத நிகழ்ச்சியோ ஆணையத்தின் அனுமதி இல்லாமல் ஒளிபரப்பக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ஆணையத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்