கர்நாடக மேகதாது அணை….கட்டுவதை எதிர்த்து…! தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு…!!!

Default Image
கர்நாடக மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசின் அனுமதியை எதிர்த்து  தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக தீவிரமாக உள்ளது.மேலும் திட்ட வரைபடத்துடன் தயாரான கர்நாடக தனது திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை மத்திய நீர்வள ஆனையத்திற்கு அனுமதியளிக்க வேண்டி அனுப்பியது.இந்த அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியது.இதனால் தர்மபுரி போன்ற தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் இந்த திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு கர்நாடகாவை மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும்  மேலும் மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் நேற்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இந்த நிலையில் இது தொடர்பான மனு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இடைக்கால மனுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த  வழக்கு தொடர்புடையவர்களுக்கு மனுவின் நகலை தமிழக அரசு அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்