தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியவர்களுக்கு பாராட்டு விழா…!!

Default Image

தேசிய அளவிலான நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சேலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே_வில்  நவம்பர் 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான பென்ஞ்ச் பிரஸ் போட்டியில் சேலத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள், இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தினர்.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான ஆணழகன் போட்டியில், வீரர் ஜித்து என்ற வீரர்  90 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார்.

அதே போல அக்டோபர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சீனியர் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை சேர்ந்த 21 பேர் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்.வெற்றி பெற்று அசத்திய சேலத்தை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு சேலம் மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்று நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்