ஸ்தம்பித்தது டெல்லி…நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி…3,500-க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு…!!

Default Image
விவசாயிகளின்  கடன்களை  ரத்து செய்து  விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என  பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி டெல்லியில் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று  போராட்டம் தொடங்கியது.இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணியாக விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி சென்றனர்.இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.விவசாயிகள் பேரணியையொட்டி, 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்