கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டித்தரப்படும் …!முதலமைச்சர் பழனிசாமி

Default Image

கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டித்தரப்படும்  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் இன்று (நவம்பர் 28 ஆம் தேதி) முதலமைச்சர் பழனிசாமி ஆய்வை தொடங்கினார்.அவருடன் துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஆய்வு செய்து வருகிறார்.அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

அப்போது முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில்,  கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டித்தரப்படும் .குடிநீர் பிரச்சனை உடனடியாக தீர்த்துவைக்கப்படும். நிவாரண பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என்றும்  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்