6 மாத குழந்தையை கத்தியால் தாக்கிய தந்தை…!!

உத்திரப் பிரதேசத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 6 மாத குழந்தையை தந்தையே கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொரதாபாத்தை சேர்ந்த சாஜத் என்பவர் தனது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 6 மாத குழந்தையை கத்தியால் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக சாஜத்தின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சாஜத்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், மனைவியின் தவறான நடத்தையை கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் குழந்தையை சாஜத் தாக்கியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU.COM

author avatar
Dinasuvadu desk

Leave a Comment