கஜா புயல்  மீட்பு பணி..!உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை…!முதலமைச்சர் அறிவிப்பு

Default Image

மின்சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு  வெளியிட்டுள்ளார்.

திருச்சி மருத்துவமனையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கடந்த 20 -ம் தேதி நடந்த கஜா புயல்  மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மின்வாரிய ஊழியர் முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.மேலும் கடந்த 16-ம் தேதி நாகையை சேர்ந்த மின்சார ஊழியர்  சண்முகம் என்பவர் சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்.அதேபோல் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு  வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்