ரூ 1,00,00,000 வரி செலுத்தாத நடிகர் விஷால்…! டிசம்பர் 11-ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Default Image

ரூ.1 கோடி சேவை வரி செலுத்தாத வழக்கில் நடிகர் விஷால் டிசம்பர் 11-ம் தேதி ஆஜராக  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016_ஆம் ஆண்டு சேவைவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் நடிகர் விஷால் ரூபாய் 1 கோடி வரை வரி செலுத்தாதது கண்டறியப்பட்ட்தாக கூறப்படுகிறது.இது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளிக்குமாறு சேவை வரி துறை அதிகாரிகள் 5 முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகி பதிலளிக்காததால்  சென்னை எழுப்பூர் அல்லிக்குளத்தில் உள்ள பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ரூ.1 கோடி சேவை வரி செலுத்தாத வழக்கில் நடிகர் விஷால் டிசம்பர் 11-ம் தேதி ஆஜராக  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இன்று விஷால் சார்பில் அவரது ஆடிட்டரும் ,வழக்கறிஞரும் பதில் அளித்தனர்.ஆனால் விஷால் நேரில் ஆஜராகவில்லை.

ஏற்கனவே கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி விஷால் நேரில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்