அமிர்தசரஸ் ரெயில் விபத்து …“மக்களின் அலட்சியமே காரணம்”…விசாரணை அறிக்கை…!!

Default Image
பஞ்சாபில் நடந்த  ரெயில் விபத்துக்கு “மக்களின் அலட்சியமே காரணம்” என விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ் அருகே தசரா கொண்டாட்டதின்  ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கே இருந்த  தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது  ரெயில் ஏறிச்சென்றது. இதில் 61 பேர்  உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே விபத்து குறித்து விசாரணைக்கு மாநில முதல்-அமைச்சர் அம்ரிந்தர்சிங் உத்தரவிட்டார்.தற்போது அந்த விசாரணை அறிக்கையில் விழா ஏற்பாடு தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தை நேரில் பார்த்த ரெயில்வே ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்களிடம் பெற்ற வாக்குமூலங்கள் அடிப்படையிலான அறிக்கையை ரெயில்வே பாதுகாப்பு அமைப்பின் தலைமை ஆணையர்  தாக்கல் செய்துள்ளார்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்