கேரள அரசை கண்டித்து நாளை கன்னியாகுமரியில் முழு அடைப்பு போராட்டம்…!தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவிப்பு

Default Image

கேரள அரசை கண்டித்து நாளை கன்னியாகுமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், சபரிமலைக்கு செல்லும்போது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை கேரள அரசு அவமதித்துள்ளது. கேரள அரசை கண்டித்து நாளை கன்னியாகுமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம்  நடைபெறும். பக்தர்களை பாதுகாக்கும் நடவடிக்கை, தடுக்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடாது.கஜா புயல் பாதிப்பிலிருந்து மீள மத்திய அரசு அதிகாரிகள், வீரர்கள் ஈடுபடுவது குறித்து உள்துறை புள்ளி விவரம் உள்ளது.கஜா புயல் நிவாரணப் பணிகளில் மத்திய அரசு ஈடுபாடு காட்டவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்