நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்படாதது ஏன்? தினகரன்

Default Image

குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்பாடு செய்து தராதது ஏன்?  என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்படாதது ஏன்? என்றும் குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்பாடு செய்து தராதது ஏன்? என்றும்  ஆறுதல் வார்த்தை கூற அமைச்சர்களோ எம்எல்ஏக்களோ ஆளுங்கட்சியினரோ வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்  வாழ்வாதாரத்தை தொலைத்த மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது கைது செய்தது நியாயமா? என்றும்  மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறும் அரசு இதுவரை இடைக்கால நிவாரண நிதியை ஏன் பெறவில்லை? என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்