15,000 போலீசார் குவிப்பு ஏன்? கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி…!!
கேரளா சபரிமலை கோவிலில் 15,000 போலீசார் குவிக்கப்பட்ட வேண்டியதன் அவசியம் என்ன? என்று கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வியை எழுப்பியுள்ளது.
கேரளா சபரிமலையில் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனால் கேரளாவில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி , rss , இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்தமாதம் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறந்த போது பெண்கள் வழிபட முயற்சி செய்ததால் அப்போது நடைபெற்ற போராட்டத்தால் பதற்றமான சூழ்நிலை நிலவியதையடுத்தும் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.கடந்த மதம் நடைபெற்ற போராட்டத்தில் பெண் பக்கதர்களை நுழையவிடாமல் தடுத்து போராட்டம் நடத்திய RSS , பிஜேபி மற்றும் இந்து அமைப்பினர் மீது இதுவரையில் 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,505 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கேரள அரசின் போலீஸ் நடவடிக்கை தொடர்பாக ஐகோர்ட்டு கேள்வியை எழுப்பியத்தில் “சபரிமலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் இதுபோன்று போலீஸ் எப்படி செயல்பட முடியும்?” , “சபரிமலை ஐயப்பன் கோவிலில் 15,000 போலீசாரை குவிக்க வேண்டிய அவசியம் என்ன?” எனவும் கேள்வியை எழுப்பி கேரளா மாநில உயர் சட்டத்துறை அதிகாரியை கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
DINASUVADU.COM