கஜா புயலால் போக்குவரத்து துறைக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் …! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கஜா புயலால் போக்குவரத்து துறைக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள் கிராமங்களிலும், கொடைக்கானலிலும் மரங்கள் அதிகளவில் விழுந்துள்ளதால் அரசுப் பேருந்துகள் இயக்க முடியவில்லை. கஜா புயலால் போக்குவரத்து துறைக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளது.சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, நாளைக்குள் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என்றும்  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment