லஞ்சம் கொடுக்க முயன்ற தினகரன்…! டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விடுவிக்க மறுப்பு ..!நேரில் ஆஜராக உத்தரவு ..!

Default Image

லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் தொடர்பாக தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image result for தினகரன்

இது தொடர்பாக இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை விசாரித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்,  தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் தினகரன் மீதான குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது. குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது என்ற கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.இதனால் லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

அதேபோல்  இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் இருப்பதால் தினகரனை விடுவிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது.

வழக்கில் இருந்து நத்துசிங், லலித்குமார், குல்பித்குந்த்ரா உட்பட 5பேரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி  தினகரனை நேரில்  ஆஜராகவும் ஆணை பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்