இரவு கரையை கடக்கும் கஜா புயல்…!அதி தீவிர புயலாக வலுப்பெறும்..!வானிலை ஆய்வு  மையம் தகவல்

Default Image

இன்று இரவு 11.30 மணியளவில் கடலூர் – பாம்பனுக்கு இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு 11.30 மணியளவில் கடலூர் – பாம்பனுக்கு இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை, விட்டு விட்டு மழை பெய்யும் – .அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்