இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் கஜா புயல் ..!மின் இணைப்பை துண்டிக்க மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உத்தரவு ..!

Default Image

கஜா புயல் கரையை கடக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி  தெரிவித்துள்ளார்.

Image result for gajacyclone

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு  மையம் கூறுகையில்,கஜா புயல் இன்று இரவு சுமார் 11.30 மணியளவில் பாம்பன்- கடலூர் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது சென்னைக்கு பாதிப்பு இருக்காது. மிதமான மழை பெய்யலாம் .14 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் 18 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இதனால் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில்  கஜா புயல் கரையை கடக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.கஜா புயல் கரையை கடக்கும்போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

இன்று  இரவு புயல் கரையை கடக்கும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி  தெரிவித்துள்ளார்.

நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்