கரையைக் கடக்கும் கஜா புயல்…! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை …!ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு

கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15 ஆம் தேதி அதாவது நாளை பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று  ஆட்சியர் அன்பு செல்வன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Comment