பணி நடந்ததாக அமைச்சர்கள் பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர்…!தினகரன் ஆவேசம்
தமிழகத்தில் எந்த பகுதியிலும் நீர்நிலைகளில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், தமிழகத்தில் எந்த பகுதியிலும் நீர்நிலைகளில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை.தூர்வாரும் பணி நடந்ததாக அமைச்சர்கள் பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர். கஜா புயலை எதிர்கொள்ள மிகவும் கவனத்துடன் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.