குழந்தைகள் தின கவிதைகள்…!!

Default Image

குழந்தைகளே
நீங்கள்
சிறகை விரித்து பறக்கும் சீட்டுக் குருவிகள்
வண்ண வண்ண உடைகள் அணியும் வண்ணத்து பூச்சிகள்
துள்ளி ஓடும் மான்கள்
மழலைப் பேச்சில் கொஞ்சும் கிளிகள்
சேர்ந்துண்ணும் காக்கைகள்
சிந்தனை பலம் கொண்ட எறும்புகள்
நீரில் மிதக்கும் காகிதப் பூக்கள்
சிற்பிக்குள் முத்துக்கள்
இசைப் பாடும் குயில்கள்
கற்பனைக்கு எட்டா அதிசயங்கள்
மழலைகளே
உங்களைப்போல் துள்ளி விளையாட ஆசை தான்
விண்ணில் பறக்க ஆசை தான்
மண்ணிலும் புரள ஆசை தான் – ஆனால்
சிறகுகளோ உடல் வலிமையோ இல்லை என்னிடம்
ஆனால் – இன்று
ஒரு நாள் மட்டும்
குழந்தையாகிறேன்
உங்களைச் சிரிக்க வைத்து என் கவலை மறக்கிறேன்
மருந்துகளை துறக்கிறேன்
மகிழ்ச்சியில் பறக்கிறேன்
தினம் தினம் இத் திருநாள் கிடைக்காதா என ஏங்குகிறேன்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்