இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து டிடிவி ஆதரவாளர் முத்தையா போட்டியிடுவது நியாயம் தானா?அமைச்சர் உதயகுமார்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், செல்லக்கூடாத வழியில் சென்று தகுதி இழந்து நிற்கிறார்கள் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து டிடிவி ஆதரவாளர் முத்தையா போட்டியிடுவது நியாயம் தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், செல்லக்கூடாத வழியில் சென்று தகுதி இழந்து நிற்கிறார்கள். பரமக்குடி எம்எல்ஏவாக இருந்த முத்தையா தற்போது பதவியை இழந்து நடுரோட்டில் நிற்கிறார் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.