எத்தனை முறை உடைந்தாலும் மீண்டும் எழுச்சியுடன் எழுந்து நிற்கும் இயக்கம்தான் அதிமுக …! அமைச்சர் உதயகுமார்
எத்தனை முறை உடைந்தாலும் மீண்டும் எழுச்சியுடன் எழுந்து நிற்கும் இயக்கம்தான் அதிமுக என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், பருவமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, சிறப்புப் படை தயார் நிலையில் உள்ளது.நிவாரண முகாம்கள், மீட்புகுழுக்கள் ஏற்படுத்துவது தொடர்பாக தொடர் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறோம் .
அதேபோல் எத்தனை முறை உடைந்தாலும் மீண்டும் எழுச்சியுடன் எழுந்து நிற்கும் இயக்கம்தான் அதிமுக. ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.