டெங்குவால் பிளஸ்-2 மாணவி பலி..!!

Default Image

டெங்கு காய்ச்சலுக்கு வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் பூஜா (வயது 16), ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். அவருக்கு கடந்த 3-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மாணவியை அவரது பெற்றோர் சென்னையில் உள்ள அரசினர் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பூஜா நேற்று முன்தினம் இறந்து விட்டார்.இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்