தீபாவளியன்று தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு…!சென்னை வானிலை மையம்

Default Image

தீபாவளியன்று தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில்  15  சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதேபோல்  நவம்பர் 6 முதல் 8ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெறும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 6,7ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், நவம்பர் 7,8ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்