13 பேரை கடித்துக்கொன்ற புலி சுட்டு வீழ்த்தப்பட்டது…!!

Default Image
மராட்டியத்தில் 13 பேரை அடித்துக்கொன்றதாக கூறப்படும் அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 13 பேரை அவ்னி என்ற பெண் புலி கடித்துக்கொன்றதாக நம்பப்படுகிறது. யாவாத்மல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பீதியை கிளப்பிய அவ்னி புலியை கொல்ல உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆன்லைன் மூலமாக கோரிக்கைகள் அனுப்பட்டன.
இதையடுத்து,  அவ்னி புலியைக் கண்டதும் சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதற்கு வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன.
எனினும், அவ்னி புலியை கண்டுபிடிக்க வனத்துறையினர் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டனர். அதி நவீன கேமராக்கள், சென்சார் கருவிகள் உள்ளிட்டவற்றை கொண்டு தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் யாவாத்மல் பகுதியில் நேற்று இரவு அவ்னி புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
அவ்னி புலி 10 மாதங்கள் ஆன தனது இரண்டு குட்டிகளுடன் வலம் வந்தது. அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அவ்னி புலியால் கடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் 13 பேரில் 5 பேரை அவ்னி புலியே அடித்துக்கொன்றதை டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தின.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்