முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், சேலத்தில் 13 வயது சிறுமி ராஜலட்சுமியை தலையை துண்டித்து கொலை செய்தவனை குண்டர் சட்டத்தில் அடைக்காமல் மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது .முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment