காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து இடங்களிலும் ஆய்வு…!! 2000 பேரிடம் 20 லட்சம் அபராதம்…!!!
டெங்கு, வைரஸ் மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதையடுத்து, சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை வணிக வளாகம், சிறுகடை வியாபாரிகள் என அனைத்து இடங்களையும் ஆய்வு செய்து வருகிறது.
இதனையடுத்து, சுகாதாரத்துறை ஆய்வு செய்ததில், பொது சுகாதாரத்துறைக்கு கேடு விளைவிக்கும் வகையில் சுத்தமாக வைத்திருக்காத தனியார் நிறுவனங்கள் மீது அபராதம் விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் 2000 பேரிடம் ரூ.20 லட்சம் அபராதம் தமிழக பொது சுகாதாரத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.