சிலைகளை வெறும் கலைப்பொருட்களாக கருத முடியாது…!தொல்லியல்துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி
ரன்வீர்ஷா வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை வெறும் கலைப்பொருட்களாக கருத முடியாது என்று தொல்லியல்துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொல்லியல்துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி கூறுகையில்,ரன்வீர்ஷா வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை வெறும் கலைப்பொருட்களாக கருத முடியாது.சிலைகள் உடைந்திருந்ததால் புதைத்து வைத்ததாக கூறுவதை ஏற்க முடியாது .சாமி சிலைகள் எங்கு இருக்க வேண்டுமோ அங்குதான் இருக்க வேண்டும் என்றும் தொல்லியல்துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி தெரிவித்துள்ளார்.