இலங்கையின் பிரதமரான ராஜபக்ச…!அதிர்ச்சியடைந்த திருமுருகன் காந்தி…!
இலங்கை பிரதமராக ராஜபக்ச பதவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார்.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது.குறிப்பாக தமிழகத்தில் தான் அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இலங்கை பிரதமராக ராஜபக்ச பதவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது .பதவியேற்புக்கு முன் சுப்பிரமணியன்சுவாமியை ராஜபக்ச சந்தித்துள்ளார். ராஜபக்சவின் பதவியேற்புக்கு மத்திய அரசின் ஆதரவு உள்ளது என்றும் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.