கெடு முடிய போகிறது……..இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா…அடிபணியுமா இந்தியா…???உற்று நோக்கும் நாடுகள்…!!

Default Image
உங்களின் கெடு முடிய போகிறது என்று இந்தியாவிற்கு  அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
Related image
இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவெடுத்தது.இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவெடுத்தது. நாட்டாமைகாரன் என்று சொல்லப்படும் அமெரிக்கா இந்த விவகாரத்திலும் மூக்கை நுழைத்தது.அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவில்  பதவியேற்ற பிறகு ஈரானுடன் மோதல் போக்கு அதிகமானது. ஆத்திரக்கார ,சர்ச்சை அதிபர் என்று சொல்லப்படும் டிரம்ப் ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் ஒரு பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
Related image

இதன் பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்தை முறித்த அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.அமெரிக்கா விலகினால் என்ன நாங்கள் அந்த ஒப்பந்தத்தில் இருக்கிறோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.விலகிய அதிலிருந்து வெளியேறிய அமெரிக்க கடுங்கோபத்தில் இருந்தது இதனை வெளிபடுத்தும் விதமாக ஈரான் நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை  விதித்தும் குவித்தும் வருகிறது.ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை தனது அதிகார நாட்டமை தனத்தை காட்டி மிரட்டு வருகிறது.

Image result for trump
அந்த மிரட்டல்  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று  ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.இதனிடையே இந்தியாவிற்கு நாட்டாமைக்காரன் அமெரிக்கா விதித்த கெடு முடிவடைய இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன அதன் பிறகு பொருளாதார தடையை அந்த நாடுகள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
Image result for trump
இதற்கு இந்தியா இம்மியள கூட பயப்படமால் அமெரிக்காவின் மிரட்டலுக்கு காது கொடுக்காமல் ஈரானிடம் கச்ச எண்ணெயை வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே தெரிவித்தார்.
Related image
இந்தியாவை சீண்டும் வகையில் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது அமெரிக்கா அதில் ஈரானிடம் இருந்து மத்த நாடுகள் கச்சா எண்ணெயை வாங்கக் கூடாது என்பதை நாங்கள் தொடர்ந்து அறை கூவல் விடுத்து வருகிறோம். அணுசக்தி ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் வீதிமீறலில் ஈடுபடும் ஈரானுக்கு தக்க பாடம் புகட்ட  பட வேண்டும்.இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என்று நாங்கள் இது தொடர்பாக விதித்த கெடு முடிய 10 நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளும் அதனை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.இதில எந்த மாற்றமும் இல்லை.
Related image
அப்படி நாங்கள் கூறியதை கேட்கவில்லை என்றால் கடுமையான பொருளாதார தடைகளை நாடு எதிர்கொள்ள வேண்டும். எண்ணெயை வழங்கும் ஈரானுக்கும் கூடுதலாக தடைகளை விதிக்க நாங்கள் முடிவு எடுத்து உள்ளோம் என அமெரிக்க அதிபர் அறை கூவல் விடுத்துள்ளார்.இந்த மீரட்டலுக்கு இந்திய அடிபணியாது என்று மத்திய அமைச்சர் தெரிவிக்கும் விதத்தில் இருந்தாலும் நாட்டமைக்கார அமெரிக்காவை  நாடு இப்படி எதிர்கொள்ள போகிறது.இதனால் நாட்டிற்கு பொருளாதார தடை ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்ளும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இந்த விவகாரத்தை உற்று நோக்கி வருகின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்