ஐ.ஏ.எஸ் கனவோடு சென்ற தமிழக மாணவிக்கு…! தூக்கை பரிசளித்த டெல்லி………….சோகத்தில் தமிழகம்….!!
ஐ.ஏ.எஸ் கனவோடு டெல்லி சென்ற தமிழக மாணவிக்கு தூக்கை கொடுத்து கண்ணை முடவைத்துள்ளது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தவர் தமிழக மாணவி ஸ்ரீமதி(21) இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆலாம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகள் தான் மாணவி ஸ்ரீமதி.
இந்நிலையில் பிள்ளை படித்து கொண்டிருக்கிறது என்று எண்ணிய பெற்றோருக்கு பேரிடியாக வந்தது இந்த தகவல் மாணவி ஸ்ரீமதி தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக மாணவியின் இந்த மர்ம மரணம் குறித்து தகவல் அறிந்த கரோல் பார்க் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி உயிரிழந்ததை அடுத்து அவருடைய பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் தற்போது டெல்லி சென்று கொண்டுருக்கின்றனர்.
அண்டை மாநிலங்களில் படிக்க செல்லும் தமிழகவர்கள் தொடர்ந்து மர்மான முறையில் இறந்து வருவது தொடர்ந்து வருகிறது இது குறித்த விசாரணையோ அல்லது தடுப்பது குறித்த முயற்சியையோ அரசு தரப்பில் எடுக்கப்பட்டாததே அண்டை மாநிலங்களில் படிக்க செல்லும் தமிழர்களின் மர்ம மரணம் தொடர காரணமாக உள்ளது என்று சமூக ஆர்வலர்களும் மக்களும் புலம்புகின்றனர்.கனவொடு சென்றவருக்கு தூக்கை பரிசாக அளித்துள்ள இந்த சோக சம்பவம் அனைவரையையும் சோகத்திலும்,அச்சத்தையும் அடைய செய்துள்ளது.
DINASUVADU