BREAKING NEWS:டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக கைது…!
டெல்லியில் சிபிஐ அலுவலகம் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவும் சி.பி.ஐ துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானா ஆகியோரை விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு.
ஆனால் சிபிஐ அதிகாரிகள் மீது எடுத்த அநியாயமான நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில்நாடு முழுவதும் அனைத்து சிபிஐ முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லியில் சிபிஐ அலுவலகம் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கைது செய்தது காவல்துறை.