மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியில் கல்லூரி மாணவி தாரணி மர்ம முறையில் மரணம் அடைந்துள்ளார்.இதனை அறிந்த அக்கல்லூரி நிர்வாகம் அதனை மூடி மறைக்க விடுமுறை அறிவித்து மாணவர்களை பூட்டி சிறைவைத்து அராஜகம் செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது.இதனை அடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் அளித்த மனுவில் மற்ற மாணவர்களின் நலனை கண்டுக்கொள்ளாத அரசாங்கத்தை கண்டித்தும் மற்றும் மாணவியின் தற்கொலைக்கு முறையான நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் எனவும் நேற்று திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.