தங்கையை மிரட்டி பாலியல்…4ஆண்டுகளாக உபியில் அரங்கேறிய கொடுமை…!!

உத்தர பிரதேசத்தில் உடன்பிறந்த தங்கையை 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
மீரட் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது சொந்த சகோதரர்களே 4 வருடமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அச்சிறுமியின் தாய் கேட்ட போது, அவரையும் அந்த இளைஞர்கள் கொலை செய்வதாக மிரட்டி உள்ளனர். இதையடுத்து அந்த சிறுமியின் தாய் சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment