பழம்பெருமைவாய்ந்த காணாமல் போன இந்த சிலைகளை கடத்தி குஜராத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததையறிந்தை கண்டுபிடித்த போலீஸார் சிலைகள் 2டையும் மீட்டனர்.
இதுவே ஜிரணிக்க முடியாத நிலையில் தஞ்சை பெரியகோவிலில் உள்ள மேலும் 42 சிலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம், தொல்லியல் துறை இணை இயக்குநர் நம்பிராஜன் ஆகியோர் தலைமையில் தஞ்சை பெரிய கோயிலில் 4ம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வில் சிலைகளின் உயரம், அகலம், எடை, தொழில்நுட்ப ரீதியில் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். தஞ்சை பெரியக்கோயிலில் சதய விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆய்வு நடைபெற்று வருவது பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ராஜராஜசோழனின் 1033வது சதயவிழா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU