பெண்களை மதியுங்கள்…ஒடுக்க நினைக்காதீர்கள்…சபரிமலை குறித்து நடிகர் சிவகுமார் கருத்து…!!

ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பெண்களை மதியுங்கள்,ஒடுக்க நினைக்காதீர்கள் என நடிகர் சிவகுமார் தெரிவித்தார்.
கேரள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லாமல் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு இந்திய முழுவதும் மக்களிடமே மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆனால் இது கேரளா இந்து அமைப்பிடையே எதிர்ப்பை கிளப்பியது.தீர்ப்பை எதிர்த்து பெண்கள் உட்பட போராட்டங்களும் நடத்தினர்.இந்நிலையில் கேரளா அரசு தீர்ப்பை அமுல்படுத்த 144 தடை உத்தரவு , தடியடி என பல நடவடிக்கை மேற்கொண்டு போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் போராட்டம் முடிந்தபாடில்லை.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகுமார்,நாம் பிறப்பதற்கு காரணம் நம்முடைய தாய் தான் , அவள் ஒரு பெண் என்பதை மறந்துவிட கூடாது. பெண்களை மதியுங்கள் பெண்கள் பல்வேறு துறையில் சாதித்து வருகின்றனர்.ரயில் நிலையம் , வங்கி , ஏர்போர்ட் என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர்.இனிமேலும் பெண்களை யாரும் ஒடுக்க முடியாது.எனவே ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மகர ஜோதி நேரத்தில் ஆண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மற்ற நாட்களின் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வழிவகை செய்யவேண்டும் என நடிகர் சிவகுமார் தெரிவித்தார்.
DINASUVADU 

Leave a Comment