முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனே பதவி விலக வேண்டும் …!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Default Image

சிபிஐ விசாரணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்வதால் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், முதலமைச்சர் தனது துறையை பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு ஒப்பந்தங்கள் தந்திருக்கிறார்.முகாந்திரம் இருப்பதாக கூறிய உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது .உத்தரவு வெளியான உடனே முதல்வர் ராஜினாமா செய்து, வழக்கை சந்தித்திருக்க வேண்டும் .ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்காக திமுக உழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்