பாலியல் புகார்கள்…!விசாரணை குழு அமைக்க கோரி 6 தேசிய கட்சிகள், சுமார் 90 சிறிய கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்…!
பாலியல் புகார்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலியல் புகார்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.முதற்கட்டமாக பாலியல் புகார் பற்றி விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழு அமைக்க கோரி 6 தேசிய கட்சிகள், சுமார் 90 சிறிய கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். கட்சிகளின் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுவதால் உயர்மட்ட விசாரணைக்குழு அவசியம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.