சபரிமலையில் ஏற்பட்ட  வன்முறைகள் பக்தர்களால் நடத்தப்படவில்லை …! சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரு

Default Image
சபரிமலையில் ஏற்பட்ட  வன்முறைகள் பக்தர்களால் நடத்தப்படவில்லை என்று  சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
இது தொடர்பாக  சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரு  கூறுகையில், சபரிமலையில் மரபுகளையும், நடைமுறைகளையும் தொடர்ந்து கடைபிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் .உச்சநீதிமன்றம் சட்டத்தை மட்டும் பொருட்படுத்துவதாகவும், மரபுகள் மற்றும் பாரம்பரியங்களை பொருட்படுத்தவில்லை. பழைய மரபுகள் தொடர்ந்து பராமரிக்கப்படவேண்டும் என்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்