இலங்கையின் கொடுமை: "8 மீனவர்கள் ,ரூ 60,00,000 அபராதம்"குடும்பத்தினர் கண்ணீர்..!!

Default Image

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் தலா 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக, 8 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களுக்கும் இதுவரை 5 முறை காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், கல்பிட்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் தலா 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, 8 மீனவர்களும் மீண்டும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் குடும்பத்தினர், அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்