75 வயதில் 28 வயதுடன் காதல் " கோடிக்கணக்கான சொத்துக்கள் முழுவதையும் இழந்த 75 வயது கோடீஸ்வரர்

Default Image

பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியரான பால் டேவிட் க்கு 75 வயதில் 28 வயது ஜோபேத் டாகுயா  மீது வந்த காதல், அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் முழுவதையும் இழப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.பால் டேவிட் தனது மனைவியான சுந்தரா_வின் மரணத்திற்குப்பின் மிகவும் தனிமையாக உணர்ந்தார்.
அவரது மகளான ஆட்ரா வாம்ஸ்டிகர்_இன் குழந்தைகள்தான் அவருக்கு வாழ்க்கையே என்று ஆகிப்போன நிலையில், அவரது பேரக்குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வந்தார் பிலிப்பைன்சைச் சேர்ந்த ஜோபேத்.
தனிமையாகவே வாழ்வை கழித்த பால் டேவிட்-க்கு மிகவும் உதவியாக இருந்தார் ஜோபேத்.ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் வந்தது, நெருங்கியும் பழக ஆரம்பித்தனர்.இந்த விஷயம் அவரது மகளான ஆட்ரா_வுக்கு தெரிய வர வீட்டில் பூகம்பம் வெடித்தது.
தந்தைக்கும் ஜோபேத்_க்கும் இடையே உள்ள உறவு தவறானது, அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆட்ரா.மகளுக்கு தான் கொடுத்திருந்த குடும்ப நகைகளைக் கேட்டபோது, அவை தனக்கு பரிசாக வழங்கப்பட்டவை என்று கூறி அவைகளையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டார் ஆட்ரா.பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு என இருவரும் மல்லுக்கட்டினார்கள்.
இந்நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு ஆட்ரா_வுக்கே சாதகமாக அமைந்துவிட்டது.அதாவது சொத்துக்கள் மட்டுமின்றி, குடும்ப நகைகளும் ஆட்ரா_வுக்கே சொந்தம் என நீதிபதி தீர்ப்பு சொல்லிவிட்டார்.சொத்துக்கள் அனைத்தும் பறிபோன நிலையிலும் தனது வயது வித்தியாசத்தைக் கூட பார்க்காமல் தன்னை மணந்து கொண்ட ஜோபேத். அவள் எனது பணத்துக்காக என்னை மணந்து கொள்ளவில்லை என்கிறார் பால் டேவிட்.தற்போது ஜோபேத்_இன் வருமானத்தில்தான் குடும்பம் நடக்கிறது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்