விஷம்போல் ஏறும் டீசல் விலை உயர்வால் விசைப்படகு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்…!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Default Image

விஷம்போல் ஏறும் டீசல் விலை உயர்வால் விசைப்படகு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீனவர்களின் போராட்டத்தை அதிமுக அரசு உதாசீனப்படுத்துவது கண்டனத்துக்குரியது .அதேபோல் விஷம்போல் ஏறும் டீசல் விலை உயர்வால் விசைப்படகு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சேதப்படுத்திய படகுகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்