"லைசன்ஸ் கேட்ட போலீஸ்" பைக்கையே தீயிட்டு கொளுத்தி , போலீஸ்க்கு அடி..!!

Default Image

பைக்கின் ஆவணங்களை கேட்ட போலீசை வீட்டுக்கு கூட்டிச் சென்று தனது பைக்கையே தீயிட்டு கொளுத்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாகன சோதனை செய்து கொண்டிருந்த போலீசாரிடம், எந்த ஆவணங்களும் இன்றி மாட்டிய நபர், வீட்டுக்கு வந்தால் ஆவணங்களை காட்டுவதாக கூறி போலீசை, வீட்டுக்கு அழைத்து வந்து தாக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா பகுதியில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தி லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு, தனது அனைத்து ஆவணங்களும் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அதனை போலீசார் ஏற்காததால் பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு அந்த நபருடன் போலீஸ் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு வந்ததும் ஆவணங்களை போலீஸ் கேட்கவே, திடீரென போலீஸை தாக்கிய அந்த நபர் தனது வாகனத்தையே தீயிட்டு கொளுத்தினார். இதனை அடுத்து, செய்வதறியாது திகைத்து நின்ற போலீசிடம் அந்த நபர் மீண்டும் சண்டை போட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதிய நிலையில், அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்