"அதிமுக VS திமுக மோதல்"தேசிய கீதத்தை ஒலிக்க செய்து சமாதானம்..!!

Default Image

உத்திரமேரூர் அருகே அரசு விழாவில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலை அதிகாரிகள் தேசிய கீதத்தை ஒலிக்க செய்து தடுத்து நிறுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த காவாம்பயிர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாம் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல் உள்ளிட்ட அதிமுகவினரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் உள்ளிட்ட திமுகவினரும் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல் கீழே அமர்ந்திருந்த அதிமுக நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏ சுந்தர் அரசு விழாவில் அரசியலுக்கு இடமில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அதிகாரிகள் சாதூர்யமாக தேசிய கீதத்தை ஒலிக்க செய்து இரு தரப்பு மோதலை தடுத்து நிறுத்தினர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்