ரபேல் போர் விமான ஒப்பந்தம் : மத்திய அரசிடம் அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்..!!

Default Image

ரபேல்  போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடைமுறைகள் என்னென்ன என்பதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டி தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் உத்தரவிட்டுள்ளார்.Image result for ரபேல் போர் விமானம்ரபேல்  போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் MN.சர்மா என்பவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையில் விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் KK.வேணுகோபால் இந்த வலக்கை பொது நல வழக்காக எடுத்துக் கொள்ள கூடாது.இது அரசியல் காழ்புணர்ச்சியால் தேர்தல் சமயத்தில் மத்திய அரசின் மீதும் , பிரதமர் மீதும் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடரப்பட்ட வழக்கு எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வாதாடினார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்ற சூழலில் நீதிபதி ரஞ்சன் கோக்காய் ரபிலே ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு எந்தமாதிரியான நடைமுறைகளை பின்பற்ற பட்டது என்ற விளக்க அறிக்கையை வருகின்ற  21 ஆம் தேதி தக்கல் செய்யவேண்டுமென்று கூறி இந்த வழக்கை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் தலைமை நீதிபதி.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்